Sunday 28 August 2011

உன்னால் முடியும்(என்னால் முடியவே இல்லை!!!!!)

’உன்னால் முடியும்’ என்ற ஒரு தன்முனைப்பு(அப்படின்னு,அவுங்க சொல்லிக்கிறாங்க)நிகழ்ச்சிக்கு,நண்பனின் அன்புத்தொல்லையால்(வேறு வழியின்றி) போக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்!!!!
நிகழ்ச்சி ,மாலை மணி ஏழுக்குன்னு சொல்லி,மாலை மரியாதை..அந்த கழுதை,இந்த கழுதைன்னு!மணி வெற்றிகரமாக 8.30(ஏற்பாட்டுக்குழுவுக்கே??தன்முனைப்பு,தாளம் போடுது போல!!!)..
நிகழ்ச்சி ஓடுது,ஓடுது......ஓடுது .முடிவே இல்லை?பெரிய பெரிய ர
ம்பங்களைக் கொண்டுட்டு வந்துருந்தாங்க பேச்சாளர்கள் எல்லோருமே!!
உன்னால் முடியும்...நிகழ்ச்சியும் முடியல,என்னாலேயும் முடியல(பெரிய பெரிய கொட்டாவி, என்னுள்ளிருந்து வெளியேற்றம்) ஏற்பாட்டுக்குழுவுக்கும் ஒரு தரமான நிகழ்ச்சியைக் கொடுக்க முடியல!!!!!!இப்படியாக எதுவுமே முடியல....முடியல...முடியல.....ஆனால் நிகழ்ச்சியின் பெயர் :’உன்னால் முடியும்’.இருப்பினும் ஒரு இடத்தில்,முடியும் என்ற சொல்லை பயன்படுத்த முடிந்தது!!!!!!!!!!!!!!!எங்கே???????அதாங்க..............’நிகழ்ச்சி எப்படா முடியும்னு இருந்த்து!!!!
சக நண்பர்களே,இனிமேல் என்னை அழைத்து போகும் முன்.................(யோசிங்கப்பா??)
***ஆனால் ஒன்று,நான் அடைந்த நன்மை:ரொம்ப நாட்களுக்கு பிறகு,என் அருமை நண்பர்களைப் பார்த்து சுமார் இரண்டு மணி நேரம், நல்லா பேசி,சிரித்தோம் பின்னால் இருக்கையில்அமர்ந்து கொண்டு (நிகழ்ச்சியை யார் பார்த்தா???)

                                                                                           





1 comment:

  1. ?அதாங்க..............’நிகழ்ச்சி எப்படா முடியும்னு இருந்த்து!!!!//

    கேட்கவே சிரிப்பா இருக்கு.

    ReplyDelete