Wednesday 6 June 2012

இன்பமும் துன்பமும் கைகோர்த்து ?


இதான் இன்பத்திற்கு பிறகு துன்பம் வரும்னு சொல்வாங்களோ?

கடைத்தெருவுக்கு சென்றேன்.திடிரென ஓர் அம்மா,ஓடி வந்து அணைத்துக்கொண்டார்!என் மாணவியின் அம்மா.டீச்சர் ரொம்ப நன்றி டீச்சர்,என் மகள் சரியா பேசக்கூட தெரியாதவள் ,இன்று நல்லா பேசுகிறாள்,ஆத்திச்சூடி சொல்கிறாள்,ஆங்கில ரைம்ஸ் எல்லாம் நுனி நாக்கில்.பழமொழிகளும் திருக்குறளும் கூட சொல்கிறால்.அவுங்க அண்ணன் அக்காவையே மிஞ்சிட்டாள்.!இன்னும் நான்கு வயது கூட பூர்த்தியாகலஆனால் ஆறு வயது போல முன்னேற்றம்.உங்களிடம் அனுப்பியதில் ரொம்ப திருப்தியடைகிறேன் என்று ஒரே புகழாராம்!

செய்வதறியாது ஒரே  மிதப்பு எனக்கு!பிறகு கொஞ்சம் அட்ட் பண்ணினாரே?...... ‘டீச்சர் அவ உங்கள மாதிரியே கத்தி கத்தி பேச ஆரம்பிச்சிட்டா,நீங்கள் எப்படி மைக் இல்லாமல் ,மைக் வச்சி பேசுவதுபோல பேசுவிங்களோ அதேப்போல பேசுகிறாள். எந்த நேரமும் வெள்ளைக்காரிமாதிரி ஆங்கில பாடல்தான் முணுமுணுக்கிறாள்,வீட்டில் எந்த நேரமும் கையில் பிரம்போடுதான் அலைகிறாள்.அவ அப்பா சின்ன தப்பு செய்துவிட்டாலும் உடனே ;எடு அந்த long ruler-ஐ அடிக்கனும்னு’கோபமாக சொல்வாள்.என் முன்னே வந்து தோப்பு கரணம் போடுங்க அப்பான்னு ஆணை இடுகிறாள்? எங்களுக்கு ஒரே சிரிப்பு டீச்சர்.அவளைப்பார்க்கும்போதெல்லாம் உங்களை பார்ப்பதுபோல  ஓர் உணர்வு’என்றும் கூறி சென்றார்.இது புகழில் எந்த ரகம்????

இங்கே அவளும் இருக்கிறாள்!



No comments:

Post a Comment