Thursday 8 August 2013

அத்தனைக்கும் ஆசைப்படு நூலில் சுட்ட சில வரிகள்

என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்!

* வெற்றிக்கு உரிமை கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் பிறர் மீது பழி போடுகிறது!

* நன்றாக வாழத் தெரியாதவர்கள்தான்,நன்றாக ஆளத்தெரியாதவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

* அமைதியும் ஆனந்தமும் கடைத்தெருவில் கிடைக்காது,காட்டிலும் கிடைக்காது.அது உங்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது.

* ஆசையத் துறக்கவேண்டும் என்று விரும்பினால்  அந்த விருப்பமும் ஓர் ஆசைதானே!

* சந்தோஷமில்லாமல் இருப்பது போன்ற மாபெரும் குற்றம் உலகில் வேறில்லை.

*அன்பாய் இருங்கள் ,அமைதி கிடைக்கும் ,அமைதியாய் இருங்கள் ஆனந்தம் கிடைக்கும்.

*எந்தச் சமூகத்தில் பெண்கள் மதிக்கப்படவில்லையோ , அந்தச் சமூகம் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பே இல்லை.

*தோல்வியே கூடாது என்றால் ,நீங்கள் விளையாட்டில் ஈடுபடவே தகுதியற்றவர்

*வேதனைகளைச் சுமக்கு பேரரசனைவிட ,ஆனந்த்ததை அனுபவிக்கும் பிச்சைக்காரன் மேல்.

*பக்திக்கும் பாசாங்கிற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது.

*உங்கள் மனம் என்பது உங்களைத் தாண்டிப்போனவர்கள் வீசி நிரப்பிவிட்டுப்போன குப்பைத்தொட்டி.

*இன்னொருவரிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருந்தால்தான் சந்தோசப்பட முடியும் என்பது ஒரு நோயல்லவா?

*அச்சத்தினாலும் ஆசையினாலும் வேண்டிக்கொள்வதன் பெயர் பிரார்த்தனை அல்ல!

*தோல்வி என்பது நடந்து முடிந்த விதத்தில் இல்லை, அதை நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள் என்பதில் இருக்கிறது

*எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் அதன் பின் விளைவுகளையும் வேதனையில்லாமல் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்தால்.

*சந்தேகம் என்பது புத்திசாலித்தனமல்ல.புத்திசாலித்தனம் குறையக் குறையத்தான் மனிதனுக்குச் சந்தேகப்படும் குணம் அதிகமாகும்.

*கடவுள் எங்கோ எட்டாத மலை உச்சியில் இல்லை.உங்களுக்குள் இருக்கிறார்.கவனியுங்கள்

*மனிதனுக்கு அடுத்த கிரகத்தைப்பற்றி ஆயிரம் ஆராய்ச்சிகள் செய்யத் தெரியும்.இந்த பூமியில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்று மட்டும் தெரியாது.

*கோபத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிப்படுத்துவதில் மனிதன் முழுத் திறமையாளனாக இருக்கிறான், அன்பையும் பரிவையும் வெளிப்படுத்துவதில் மட்டுமே கற்றுக் குட்டியாகவே இருக்கிறான்.

*ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பிரியத்தில் தீவிரம் இருக்கும் ,எதிர்பார்ப்பு இருக்காது.

*காயங்கள் இல்லாமல் கனவு  வேண்டுமானால் காணலாம்,வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது.

* உங்களை நிந்திப்பவரைப் பதிலுக்கு நிந்திக்க ,புத்திசால்லித்தனம் தேவையில்லை.அமைதியாக இருக்கத்தான் அதீத புத்திசாலித்தனம் தேவை.

* சந்தோசம் என்பது விரும்பியதைச் சொந்தமாக்கிக் கொள்வதிலா இருக்கிறது?கிடைத்த பின் அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது.

*மூட்டைக்குள் பொன் இருந்தால் என்ன ?புழுதி இருந்தால் என்ன?
கையாளத் தெரியாவிட்டால் இரண்டும் பாரம்தான்.

(இன்னும் நிறைய அந்த நூலில் கொட்டிக்கிடந்தாலும் ,என்னைக்கவர்ந்ததும் ,அதைப்படித்து நான் அதுவாக பாவித்து வரும் சில வரிகளை இங்கே எழுதியுள்ளேன்)
                                                               

3 comments:

  1. அருமையான வாசகங்கள்
    தொகுத்துத் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருமை!சத்திய வாக்குகள்!!!பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete