Sunday 24 November 2013

பிறப்பு ,இருப்பு ,இறப்பு!

படித்தேன்...வியந்தேன்..... பகிர்கிறேன்!

பிறப்பு ,இருப்பு, இறப்புகளுக்கு உரிய ,பிறப்பில் ஓர் எள் அளவு கூட இன்பம் இல்லை!
பிறப்பில் வரும் 5 துன்பங்கள்:
1)குழந்தை கருவில் இருக்கும்போது,இரண்டு மலை நெருக்குவது போலநெருக்குண்டல்.
2)கடலில் மிதப்பது போல கருப்பப்பை நீரில் மிதத்தல்,
3)இரும்புக்குடத்தில் சூடேற்றுவது போல இரத்தச் சூட்டால் வேதல்,
4)மலையின் மீதிலிருந்து கீழே தள்ளுவது போல பிரசூத வாயுவால் தள்ளப்படுதல்,
5)ஆலையில் இட்ட கரும்பு போல யோனித் துவாரத்தில் நெருக்குண்டு வெளியே வருதல்.

இறப்பில் வரும் துன்பம்;
இறப்பில் வரும் துன்பத்தை இறைவன் மட்டுமே அறிவான்.எனவே அது பிறப்பால் வரும் துன்பம் போல எட்டு மடங்கு என ஓர் அளவையால் சொல்லப்பட்டது.

இருப்பில் வரும் துன்பங்கள் :
குழந்தைப்பருவம்,குமரப்பருவம்,வயோதிகப்பருவம் என மூன்று பருவங்களிலும் அறியாமை ,வியாதிகள்,,பசிநோய்,காமநோய்,செல்வத்தை தேடுதல்,நரை, திரை,மூப்பு என எப்பொழுதும் துன்பமே தவிர இன்பம் இல்லை

பசிநோயும் காமநோயும் குன்மம் எனப்படும் ஒருவகை வயிற்றுவலி போன்றது.அவ்வலிக்கு உவர்மண் நீர் குடித்தால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.அதுபோல பசியும் காமமும் அருந்துதல் பொருந்துதலால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.எனவே இவ்விரண்டும் விட்டு ஒழிக்க அரியது என்று அறிக!!



2 comments: