Saturday 18 July 2015

இதுதான் மனித மனம்!

      சுமார் 10 வருடங்களாக ஒரு அழகான ஹேன்பேக் வைத்திருக்கிறேன்.அதில் சில பொருட்களை வைத்து அலமாரியின் மேல் வைத்திருப்பேன் ,தேவை ஏற்பட்டால் மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் அங்கே வைத்துவிடுவேன்.நேற்று மீண்டும் எடுத்து சில முக்கிய தஸ்தாவேஜுக்களை எடுத்து கீழேயே வைத்து ,பேக்கைத் துவைக்க எண்ணி சுத்தம் செய்தேன்.ஒரு பண உறை கிடந்தது.மலேசியாவில் ஏதும் பண்டிகை எண்டால்(ang pow) ,பண உறையில் பணம் வைத்துக் கொடுக்கும் சீனரின் கலாச்சாரம் இருக்குது.அதை மூவின மக்களும் பழக்கிவிட்டோம்.அதேப்போலத்தான் தீபாவளிக்கு தயார் செய்து வைத்த பண உறைதான் அது.

                அந்த பண உறைதான் கிடந்தது.ஆனால் கொஞ்சம் பழசாய் போய் கிடந்தததால்,நான் கண்டுகொள்ளவில்லை.மீண்டும் அறையைப் பெருக்கி குப்பைகளை சுத்தம் செய்தேன்.அந்த பண உறை என் காலில் மிதி பட்டது.எப்போதும் எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்யும் நல்ல பழக்கம் என்னிடம் எப்போதும் உண்டு.ஆகவேதான் இதுவரையில் என் உடமைகளை நான் மிஸ் பண்ணியதோ ,தொலைத்ததோ கிடையாது என்றே சொல்லலாம்.

                  அதேப்போல அந்த பண உறையை வீசும் முன் உள்ளே ஏதும் இருக்காவென பார்த்தேன் ,கையில் நூறு வெள்ளி நோட்டு பட்டது.எப்போதோ யாரோ எனக்கோ ,என் பிள்ளைக்கோ கொடுத்தது என்று நினைக்கிறேன்.அடடா !வீசியிருந்தால்?மிகுந்த மகிழ்ச்ச்சியுடன் எடுத்து பிள்ளைகளிடம் காட்டினேன்.ஒரே சந்தோசம் ஆனால் அந்த மகிழ்ச்சி சிலநொடிகளில்  இன்னுமொரு கவலையைச் சேர்த்துக்கொண்டது!.ஆம்! இதுபோல எத்தனைப் பண உறைகளை வீசியிருப்பேன்?அதில் எவ்வளவு பணம் போனதோ? இப்படி கவனமில்லாமல் வீசியிருந்தால்?என்ற அச்சம் இன்னும் என்னை வாட்டுகிறது.கிடச்சதை வச்சி சந்தோசப்படாமல் ,இல்லாததை நினைத்து ஏங்கும் இதுதான் சராசரி மனித மனம்! மனித மனம் திருப்தியடைவே மாட்டேங்குது!!!

2 comments:

  1. // எப்போதும் எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்யும் நல்ல பழக்கம் என்னிடம் எப்போதும் உண்டு... //

    இதுவே சந்தேகம்...!

    ReplyDelete
  2. மனித மனமே இதுதானே சகோதரி...

    ReplyDelete